தாய்ப்பால் சுரக்கவில்லை தாய் தற்கொலை

இலங்கை மட்டக்களப்பில் 180 தற்கொலை
Spread the love

தாய்ப்பால் சுரக்கவில்லை தாய் தற்கொலை

குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தவறான முடிவெடுத்து தாய் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் பதிவாகியுள்ளது.

40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தாய்ப்பால் சுரக்கவில்லை தாய் தற்கொலை

குறித்த பெண்ணுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகளின் பின்னர் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள போதும், தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற மன அழுத்தத்தில் குறித்த பெண் இருந்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே அவர் நேற்று தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வின்சன் தயான் அன்ரலா மேற்கொண்டுள்ளார்.

வீடியோ