தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன்
தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன் தமிழர்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
தமிழீழ விடுதலை புலிகளினால் பிரிந்து கிடந்தது அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த குழுக்களை ஒன்றிணைத்து ,தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அரசியல் காட்சியை உருவாக்கினர் .
அதற்கு தலைவராக இரா சம்பந்தன் அவர்களை தெரிவு செய்தனர் .
இவ்வாறு தமிழீழ விடுதலை புலிகளினால் தமிழ் அரசியல் தீர்வு தொடர்பாக நகர்ந்து செல்ல ஒருங்கிணைக்க பட்ட கட்சிகள் ,உடைக்கும் நகர்வில் சட்டத்தரணி சுமந்திரன் ஈடுபட்டு வருகிறார் .
இலங்கை தமிழரசு கட்சி தலைவராக சிறிதரன்
இலங்கை தமிழரசு கட்சி தலைவராக சிறிதரன் தெரிவு செய்ய பட்டதில் , இருந்து இன்றுவரை சிறிதரனுக்கு எதிராக சட்ட மிரட்டல் விடுத்த வண்ணம் உளளார் இந்த எடுபிடி எம் ஏ சுமந்திரன் .
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு காண போகிறோம் , இலங்கை அரசுடன் பேச போகிறோம் என கூறும் சுமந்திரன் ,இன்று அதே மக்களினால் தெரிவு செய்ய பட்ட உறுப்பினர்கள் ஊடக தெரிவு செய்ய பட்ட தலைவரை ஏற்க மறுத்து ,சிறிதரனுக்கு சதிகளை அவிழ்த்து வருகிறார் .
கட்சிக தோழமைகளே மிரட்டும் சுமந்திரன்
என்னை எதிர்க்கும் யாவருக்கும் சிறை காத்துள்ளது என்பதே சுமந்திரன் நிலை பாடாக உள்ளது .
சுமந்திரன் சிறந்த இராய தந்திரி எனவும் ,தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கி தருவார் என பல அரசியல் கட்சியின் தலைகள் ,வாடகை வாய்களும் பேசுகின்றன .
விரிவாக கூறுவது என்றால் அவருக்கு பரிந்து படுகின்றன .கடந்த தேர்தலில் ஆசனங்களை இழந்து வீடு செல்லும்நிலைக்கு சென்ற சுமந்திரன் ,சம்பந்தன் மயிரிழையில் தப்பினர் .
அதன் பிற இப்பொழுது ஆளும் அதிகார வர்க்கத்தை தன்னக்தே வைத்தும் ,சட்டத்தை வைத்தும் ,பல குளறு படிகளையும் ,சக கட்சி தோழர்களையும் திரைமறைவில் மிரட்டி வருகின்றாராம் .
இதனை வெளியில் கூற முடியாது பல தலைகள் சுழல்கின்றன .சட்டத்தை வைத்து மிரட்டுவதே சட்ட குற்றம் என்பது சட்டம் படித்த சட்ட மேதை சுமந்திரனுக்கு தெரியவில்லை போலும் .
பதவி ஆசைகளுக்கு அலைவதை விடுத்து ,மக்களின் விடியலுக்கு போராடுங்கள் மிஸ்ட்டர் சுமந்திரன் .
நீங்கள் தான் துணிந்தவர் ஆயிற்றே ..சிங்கம் சிங்கிளா தானே வரும் .வாருங்கள் நேரலையில் விவாதிப்போம் ,கேட்பதற்கு நிறைய உள்ளன .பலமுறை கேட்டு விட்டோம் .ஏன் ஊடகங்களை சந்திக்க பயந்து ஓடுகின்றீர்கள் .
ஏனைய கட்சி பிரமுகர்கள் அழைத்தால் ,திருப்பி அழைத்தும் பேசுகின்றனர் ,தமது தரப்பு நிலை பாட்டை தெரிவிக்கின்றனர் .
தனி நபர் சுமந்திரனுடன் எமக்கு எவ்வித கருத்து முரணும் இல்லை ,மக்கள் அரசியல் பொதுத்தளத்தில் பயணிக்கும் உங்கள் மீது எதிர் தரப்பால் இவ்விதமான குற்ற சாட்டு வைக்க படுகிறது .அதற்கு உங்கள் பதில் என்ன மிஸ்ட்டர் சுமந்திரன் ..?
–வன்னி மைந்தன் –