மனைவி
காகம் போல தினம் கரைவாள்
கடமை சோரா தினம் காய்வாள்
இல்லா நிலையில் இல்லம் வாடாள்
இருப்பதை வைத்தே இயக்கி போவாள்
அன்பு அதிகம் கொள்வாள்
அதனால் அதிகம் எரிவாள்
பண்பு தினம் பொலிவால்
பாயிலே தினம் ஓய்வாள்
பத்து மாதம் சுமப்பதுவும்
பணிவிடைகள் தினம் செய்வதும்
சத்தி வாய் வயிறோடும்
சளைக்கா வீடு உழைப்பதுவும்
எண்ணையில் மனம் வியக்கிறது
எப்படி இவளால் முடிகிறது
பாவம் செய்த ஓர் பிறப்பு
பாவை இவளின் பொறுப்பு
உணவு கொஞ்சம் இருந்தாலும்
ஊட்டி பிள்ளை வளர்ப்பதுவும்
பட்டினி கிடப்பதை மறைப்பதுவும்
பழகி போன வாழ்வாகும்
போதையில் கணவன் அடிப்பதுவும்
பொல்லாமை நெஞ்சு வீசுவதும்
எல்லாம் சகித்து வாழ்வதும்
எப்படி இவளால் முடிகிறது
பெண்ணாய் பிறந்தவர் பாவமடா
பெரும் துயர் கடக்கிறார் நாளுமடா
அன்பை கொஞ்சம் காட்டுங்கடா
அறத்தை நாட்டி வாழுங்கடா ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 06-04-2024
- பெண்ணால் உறவில் யுத்தமா
- எட்ட முடியா சிகரம் எட்டு
- இசைக்கு இன்று பிறந்த நாள்
- வெல்ல போறேன் காத்திரு
- வெற்ற பெற தனித்திரு
- உடைந்த காதல்
- மறக்க முடியா நட்பு காலம்
- மனைவி
- தாயால் கொலையாளியான மகள்
- எட்டு திசையும் எழ வெடி
- எப்படி ஆறும் இத்துயர்
- இது தான் காதல்
- இவள் எங்கள் ஈழ குயில்
- என்னை விட்டு விடு
- தோல்விகள் தந்த சாதனை
- விழித்து கொள் தமிழா
- சீமான்
- கிழவருக்கு ஒரு மடல்
- பாயும் பெண் புலி
- ஏன் வர மறுக்கிறாய்
- சாதிக்கலாம் துணிந்துவா
- உன் இதயத்தை எனக்கு தா
- உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்
- இரக்கம் காட்டு
- உன்னால் தவிக்கிறேன் ஏற்று விடு
- இறக்கும் வரை மகிழ்வு கொடு|சோக கவிதை|கண்ணீர் கவிதைகள்
- எல்லாம் போச்சு ஏமாந்து போனேன்
- நீ வேண்டும் எனக்கு
- நீயே உனக்கு துணை
- மனிதம் ஒன்று வீழ்ந்தது
- போர் மகளே வாழ்க
- ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம்