எப்படி ஆறும் இத்துயர்
வீரம் விளைந்த மண் எங்கே
விதையான வேர் எங்கே
ஆழ கடலோடிய கலமெங்கே
ஆகாய வான் எங்கே
ஓயாது ஒலித்த குரல் எங்கே
ஓயாத அலை களமெங்கே
இரவெல்லாம் விழித்த
இன காவல் எங்கே
எல்லாம் இழந்து எங்கள் தேசம்
ஏனோ இப்படி கிடக்கிறது
எவர் என்ன கேட்பார்
எவர் என்ன சொல்வார்
சொல்ல மறந்த கதைகள்
சொல்லாமல் உறங்க
சொல்லி அழ முடியா
சொந்தங்கள் தவிக்க
நடை பிணமாய் உடல்
நாதியற்று நடக்கிறது
அழுவதால் பயனில்லை
ஆனாலும் வலிக்கிறது
எழுத முடியா பேனைகளும்
எடுத்துரைக்க முடியா வாய்களும்
மவுனம் ஆனதால்
மாயங்கள் நடக்கிறது …..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-04-2024
- இசைக்கு இன்று பிறந்த நாள்
- வெல்ல போறேன் காத்திரு
- வெற்ற பெற தனித்திரு
- உடைந்த காதல்
- மறக்க முடியா நட்பு காலம்
- மனைவி
- தாயால் கொலையாளியான மகள்
- எட்டு திசையும் எழ வெடி
- எப்படி ஆறும் இத்துயர்
- இது தான் காதல்
- இவள் எங்கள் ஈழ குயில்
- என்னை விட்டு விடு
- தோல்விகள் தந்த சாதனை
- விழித்து கொள் தமிழா
- சீமான்
- கிழவருக்கு ஒரு மடல்
- பாயும் பெண் புலி
- ஏன் வர மறுக்கிறாய்
- சாதிக்கலாம் துணிந்துவா
- உன் இதயத்தை எனக்கு தா
- உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்
- இரக்கம் காட்டு
- உன்னால் தவிக்கிறேன் ஏற்று விடு
- இறக்கும் வரை மகிழ்வு கொடு|சோக கவிதை|கண்ணீர் கவிதைகள்
- எல்லாம் போச்சு ஏமாந்து போனேன்
- நீ வேண்டும் எனக்கு
- நீயே உனக்கு துணை
- மனிதம் ஒன்று வீழ்ந்தது
- போர் மகளே வாழ்க
- ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம்
- இறுதிவரை இவனே துணை
- எதிரி நீ புரிந்து விடு