மனித புதைகுழி கண்டு பிடிப்பு
பாலஸ்தீனம் காசா கான்யுனிஸ் பகுதியில் மனித புதைகுழி கண்டு பிடிப்பு.இருநூறுக்கு மேற்பட்ட சடலங்கள் இந்த மனித புதைகுழியில் கண்டு தோண்டி எடுக்க பட்டுள்ளது .
பாலஸ்தீனம் காசா பகுதியை ஆக்கிரமித்து இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டு வரும் ,மிக பெரும் மனித படுகொலைக்கு சான்றாக இது மாற்றம் பெற்றுள்ளது .
இஸ்ரேலிய இராணுவத்தினர் காசா தெற்கு பகுதியில் இருந்து விலகி சென்ற நிலையில் ,அங்குசென்ற மக்கள் நடத்திய தேடுதலின் பொழுது ,நாசர் மருத்துவ வளாகத்தில் இந்த மனித சடலங்கள் புதைக்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை
காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப் படுகொலைகளின் ,ஆதார சுவடாக இந்த மனித புதைகுழி காணப்படுகிறது .
இதுவரை சிறார்கள் ,பெண்கள் ,வாலிபர்கள் உள்ளிட்ட இருநூறு சடலங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .
மேலும் இது போன்ற மனித புதைகுழிகள் காணப்படலாம் என அஞ்ச படுகிறது .
இஸ்ரேல் இராணுவத்தால் சிறை பிடித்து செல்ல பட்ட மக்கள் ,கொடூரமாக வதைகள் செய்யப்பட்டு ,பின்னர் கொன்று இவ்வாறு புதைக்க பட்டுள்ளனர் .
இஸ்ரேலிய யூத ஆக்கிரமிப்பு இராணுவத்தின் உச்ச கட்ட, கொடுங்கோலாக இந்த படுகொலையை பார்க்க முடிகிறது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர்
இஸ்ரேல் பாலஸ்தீன் போர் என்பது ,இன்று நேற்றல்ல ,ஐம்பது ஆண்டுகளாக மிக கொடூரமாக உச்சம் பெற்று வருகிறது .
தங்கி வாழ இடம்கொடுத்த மக்கள் குடிகளை அங்கிருந்து விரட்டியடித்து ,தற்போது அந்த நாட்டு குடிகளை அங்கிருந்து விரட்டி ,மொத்த பாலஸ்தீன நாட்டையும் தனது நாடாக்க இஸ்ரேல் முனைவதையே, இந்த மனித புதைகுழிகள் எடுத்து காட்டுகின்றன .
இதுவரை பாலஸ்தீனம் காசா பகுதியில் இரண்டு லட்சம் வீடுகள் உடைக்க பட்டுள்ளன .
மீளவும் காசா பகுதியில் மக்கள் குடியேற முடியாத நிலையில் ,அணைத்து வீடுகளும் அடித்து நொறுக்க பட்டு சுடுகாடாக காணப்படுகிறது .
இங்கு மீளவும் மக்கள் வாழ்விடங்களை கட்டி எழுப்பி ,மீள் இயல்பு வாழ்விற்கு திரும்பிட பத்து ஆண்டுகள் வரை செல்லும் எனப்படுகிறது .
அழிக்க பட்ட பாலஸ்தீன பொருளாதாரம்
கொடிய யுத்தத்தை பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் திணித்து .அதன் ஊடாக அவர்களது பொருளாதாரத்தை சிதைத்து ,அந்த மக்களை பிச்சை காரர்களாக ஆக்கும் மிக கேவலமான நிலையை ,இஸ்ரேல் புரிந்து வருவதை இந்த தாக்குதல் சம்பவங்கள் காண்பிக்கின்றன
வரலாற்றில் மீளவும் பாலஸ்தீனம் உலகில் நிமிர்ந்து நிற்க கூடாது என்ற நிலை பாட்டில் ,இஸ்ரேல் ஆட்டம் போடு வருவதை ,இஸ்ரேல் பலஸ்தீன போர் தெளிவாக காட்டுகிறது .
தனி நாடே இஸ்ரேல் பாலஸ்தீனம் போருக்கு தீர்வு
முடிவில்லா தொடரும் பாலஸ்தீன இஸ்ரேல் போர் தணிக்க பட்டு இரு தேசங்களும் ,இரு நாடுகளாக மற்றம் பெறும் பொழுது தான் ,அரேபிய தேசத்தில் அமைதி திரும்பும் .
அவ்வாறு இல்லாவிட்டால் ,இந்த போர் உலக நாடுகள் எங்கும் பரவி மூன்றாம் உலக போரை ஆரம்பித்து வைக்கும் என்ற அச்சத்தை இவை எடுத்து காட்டுகின்றன .