சிறை பட்ட புலி ….!

Spread the love

சிறை பட்ட புலி ….!

சிறைக்குள்ளே புலி ஒன்று சிறை பட்டதோ ..?
சிறை பட்டும் அடங்காது குரல் இட்டதோ ….?
இவன் செய்த பாவம் இன்றென்னவோ..?
இது தான் தமிழ் என்றான் இது குற்றமோ ..?

ஏனடா தமிழா நீ மூடனா ..?
எரியடா தீயாய் நீ நாடடா …
சிறைக்குள்ளே நுழைந்து சிறை நிரப்படா
சீமான் பிள்ளைகள் நாம் சொல்லடா ….

கொடியவன் ,கொள்ளையன் அதிரட்டுமே
கொடியார் விலங்கும் உடையட்டுமே …
இனி ஒரு கைதை நிறுத்தட்டுமே
இது தான் போர்க்குணம் தமிழ் உரைக்கட்டுமே…

சிறை பட்ட புலி இனி தூங்கிடுமோ ..?
சிறுத்தையின் பிள்ளைகள் தூங்கிடுமோ ..?
ஏதடா தமிழா உன் போர்க்குணமோ ..?
எங்கே கட்டாட இது களமே….

அஞ்சுதல் தமிழுக்கு கேவலமே
அடிமை தமிழுக்கு சீதனமோ ..?
கெஞ்சுதல் இங்கே முதல் பாவமே
கொட்டடா முரசு விலங்கு உடையட்டுமே ….!

19/07/2018 சீமானை சிறை அடைத்த செய்தி அறிந்த போது…!
-வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/07/2018

Home » Welcome to ethiri .com » சிறை பட்ட புலி ….!

Leave a Reply