பிரதமர் மோடியை கொல்ல சதி
டெல்லி திகார் சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னாயை விடுவித்து ரூ.500 கோடி தராவிட்டால் பிரதமர் மோடியை படுகொலை செய்வோம்,
நரேந்திர மோடி ஸ்டேடியத்தை குண்டு வைத்து தகர்ப்போம் என இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து மும்பை காவல் துறை மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரதமர் மோடியை கொல்ல சதி
மத்திய பாதுகாப்பு பிரிவு ஒன்றுக்கு மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், ‘‘சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னாயை விடுவிக்க வேண்டும். ரூ.500 கோடி தர வேண்டும். இல்லையென்றால், பிரதமர் நரேந்திர மோடியை
படுகொலை செய்வோம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தையும் குண்டுவைத்து தகர்ப்போம். இந்தியாவில் அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. நாங்களும் சிலவற்றை வாங்க வேண்டும்.
நீங்கள் எவ்வளவு பாதுகாப்புடன் இருந்தாலும், நீங்கள் எங்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியாது. நீங்கள் பேச விரும்பினால், நாங்கள் கூறியதை
செய்யுங்கள்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இ-மெயில்எங்கிருந்து வந்தது என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
- வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை
- இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
- காணி மோசடி செய்து விற்பனை
- காதாலியை பார்க்க சென்றவர் மாயம்
- லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா
- பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
- தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்