பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கைது
60 வயதுடைய பெண்ணொருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை, வீட்டிலிருந்தவர்கள் கட்டி வைத்த சம்பவம் ஒன்று றம்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தையடுத்து குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக றம்புக்கன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் றம்புக்கன பொலிஸ் பிரிவில் கடமையிலிருந்த பொலிஸ் சர்ஜன்ட் ஆவார்.