பாராளுமன்றத்தில் பதற்றம் – சபாநாயகரின் அறிவிப்பு

பாராளுமன்றத்தில் பதற்றம் - சபாநாயகரின் அறிவிப்பு
Spread the love

பாராளுமன்றத்தில் பதற்றம் – சபாநாயகரின் அறிவிப்பு

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை சபையை விட்டு வெளியேறுமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இன்று காலை பாராளுமன்றம் ஆரம்பமானதும் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா உரையாற்றினார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நிமல் லான்சாவை தாக்க முயற்சித்ததன் காரணமாக சபாநாயகர்
சமிந்த விஜேசிறியை சபையை விட்டு வெளியேறுமாறு அறிவித்துள்ளார்.