பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை

Spread the love

பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்குள்ளானதால் பாதிக்கப்பட்டுள்ள

மீனவருக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை முதல் இடம் பெறும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ள பாணதுறை முதல் நீர்கொழும்பு வரையான

கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் (11) பிரதமர் ஆலோசனை வழங்கினார்.இதன்போதே இந்த கொடுப்பனவு தொடர்பாக பிரதமர் அறிவித்தார்.

கப்பல் விபத்துக்குள்ளானதால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது.

இழப்பீட்டை பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு

பிரதமர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Leave a Reply