பசில் மனைவி அமெரிக்கா தப்பி ஓட்டம்

Spread the love

பசில் மனைவி அமெரிக்கா தப்பி ஓட்டம்

இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே மனைவி புஸ்பா ராஜபக்சே
இலங்கையை விட்டு அமெரிக்காவுக்கு தப்பி ஓடியுள்ளார்

இன்று பசில் ராஜபக்சே தனது எம்பி பதவியை இராஜினாமா செய்திட முன்னர் அவர் அதிகாலை வேலை இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளார்

இலங்கையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் பசில் மனைவி நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார்

பசில் மனைவி மீது பாரிய லஞ்ச ஊழல் மோசடி குற்ற குட சாட்டு சுமத்த பட்டுள்ளது ,இவ்வாறான குற்ற சாட்டு சுமத்த பட்ட நிலையில் பசில் மனைவி இலங்கையை விட்டு அமெரிக்காவுக்கு தப்பி ஓடியுள்ளார்

அதிகாரம் வழங்க படும் பொழுது இலங்கையில் வசிக்கும் பசில் ராஜபக்சே குடும்பம் அதிகாரம் இல்லாத பொழுது அமெரிக்காவில் தங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்

அமெரிக்காவில் பசில் ராஜபக்சே ஆடம்பர வீடுகள் மற்றும் பலசரக்கு கடைகள் என்பன இயங்கி வருகின்றன

இவர்களது உணவகங்களில் தமிழர்களும் சென்று உணவருந்தி செல்கின்றனர் ,ஆனால் தமிழர்களுக்கு இந்த உணவகங்கள் பசில் ராஜபக்சேவுக்கு சொந்தமானது என்பது தெரியாது

இலங்கை அரசியல் வாதிகள் பலரது சொத்துக்கள் வெளி நாடுகளில் பிற நபர்கள் பெயரில் வைத்து நடத்த பட்டு வருகிறது

பசில் மனைவி அமெரிக்கா தப்பி ஓட்டம்

இலங்கையில் புதிய ஆளுமை கொண்ட ஜனாதிபதி அல்லது ஆட்சியாளர்கள் ஆட்சியில் அமரும் போது ராஜபக்சே குடும்பத்தின் சொத்துக்களை மீட்டு இலங்கைக்கு ஒப்படைக்கலாம்

ஆனால் அதனை திறன் கொண்ட ஆட்சியாளர்கள் இலங்கையில் உருவாக்கம் பெறுவார்களா என்பது சந்தேகமே

பசில் ராஜபக்சே வெற்றிகரமாக பதவி விலக்க பட்டது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

பதவி விலகுவது போல் விலகி மீளவும் புதிய பதவியைஏற்று கொள்வார் என்ற சர்ச்சை பேச்சும் மக்கள் மத்தியில் உலவுகிறது

குளறு படி அரசியல் விளையாட்டில் பசில் கில்லாடி ,அவ்விதம் அமெரிக்காவுக்கு தப்பி ஓடுவது போன்று திசை திருப்பி மீளவும் ஆட்சி அதிகாரத்தில் இவர்கள் அமர கூடும் என்ற அச்ச உணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது

    Leave a Reply