நயினாதீவில் சுமார் 20 கிலோ கஞ்சா மீட்பு

நயினாதீவில் சுமார் 20 கிலோ கஞ்சா மீட்பு
Spread the love

நயினாதீவில் சுமார் 20 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம், நயினாதீவில் 20 கிலோ மற்றும் 140 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நயினாதீவு கடற்கரையில் கஞ்சா இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு கடற்படையுடன் இணைந்து விரைந்த விசேட அதிரடிப் படையினர் 20 கிலோ மற்றும் 140 கிராம் கஞ்சாவினை கைப்பற்றினர்.

இதனை அடுத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் (13) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.