தேர்தலில் நாங்களே வெல்வோம் மகிந்தா திமிர் பேச்சு
இலங்கையில் மீளவும் தேர்தல் இடம்பெற்றால் அதில் நாமே மகத்தான வெற்றியை பெறுவோம் என ,மக்களினால் துரத்தியடிக்க பட்ட, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா தெரிவித்துள்ளார் .
கோட்டபாய மற்றும் ,மகிந்தா ராஜபக்ச சகோதரர்கள், உடனடியாக பதவி விலக வேண்டும் ,என கோரி மக்கள், வரலாற்று போரை நடத்தி விரட்டியடித்தனர் .
அதன் பின்னர் தமது அரசியல் எதிர்காலம் தொலைந்து விட்டது என குமுறியபடி நடைபயிலும் ,ராஜபக்ச குடும்பம் ,மீளவும் தாமே தேர்தலில் வெல்வோம் என திமிருடன் பேசி வருவது மக்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது .
மகிந்த ராஜபக்சாவை சீனா தூதுவர் மற்றும், சுப்பிரமணிய சுவாமி ஆகியோர், சந்தித்த பின்னர் ,மகிந்த ராஜபக்ச தேர்தலில் வெல்வோம் என பேசியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
மின்பதிவு இயந்திரங்களை கைக்கிங் செய்து, அதன் ஊடாக வாக்குகளை பெற்று வெற்றியாளர்கள் தாமே என, காண்பிக்க மகிந்த ராஜபக்ச , தரப்பு முனைய கூடும் என அஞ்ச படுகிறது .