தெற்கு லண்டனில் கஞ்சா பண்ணை சுற்றிவளைப்பு
தெற்கு லண்டன் Streatham High Road பகுதியில் மிக இரகசியமாக வளர்த்து வரப்பட்ட கஞ்சா
பண்ணை ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .
போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதி சுற்றி வளைக்க பட்டது .
திருட்டு மின்சாரம் பெற்று,இந்த கஞ்சா செடிகள் வளர்க்க பட்டு வந்துள்ளன .
தெற்கு லண்டனில் கஞ்சா பண்ணை சுற்றிவளைப்பு
அதனால் என்னவோ குறித்த பகுதி நீண்ட நாட்களாக ,காவல்துறையினர்
கண்ணில் தென் படவில்லை .ஆனால் இப்பொழுது வசமாக சிக்கியது கஞ்சா கும்பல் .
குறித்த பகுதியானது முன்னர் காவல்நிலையமாக பயன்படுத்த பட்ட பகுதிக்கு, அருகில் அமைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இங்கு மீட்க பட்ட கஞ்சாவின் பெறுமதி லட்சம் பவுண்டுகளுக்கு மேல் என எதிர்பார்க்க படுகிறது .
கைதானவர்கள் காவல்துறையினர் விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .