திருட சென்று வீட்டில் தூங்கிய திருடர்கள் யாழில் நடந்த திகில் சம்பவம்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் திருட சென்ற திருடர்கள் ,அந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு தூங்கிய திகில் சம்பவம் இடம் பெற்றுள்ளது .
அதிக போதையில் திருட சென்ற திருடர்கள், வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து சமைத்து சாப்பிட்டு ,பின்னர் அங்கேயே தூங்கியுள்ளனர் .
காலை வீடு வந்த உரிமையாளர் திருடர்களை கண்ணுற்று சத்தமிட்டுள்ளார் .
அயலவர்களை கண்ணுற்ற ஒருவர் தப்பி ஓடிவிட்டார் ,ஒருவர் சிக்கி கொண்டார் .
சிக்கியவர் காவல்துறையிடம் ஒப்படைக்க பட்டுள்ளார் .
இவர்கள் மீது திருட்டு மற்றும் குற்ற சம்பவம் தொடர்பிலான வழக்குகள் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
வடிவேலு காமடியாக இந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .