தடம் புரண்டதால் ரயில் சேவையில் தாமதம்

ரயில் மோதி வாலிபன் மரணம்
Spread the love

தடம் புரண்டதால் ரயில் சேவையில் தாமதம்

கொட்டா வீதியில் அமைந்துள்ள ரயில் நிலையம் அருகே ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பயணிக்கும் புகையிரதம் தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாலை 4 மணி அளவில் கொழும்பு கோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கி பயணிக்க ஆரம்பித்த அலுவலக புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 2 ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.