தங்க புதையல் பொலிசிடம் சிக்கியது

தங்க புதையல் பொலிசிடம் சிக்கியது
Spread the love

தங்க புதையல் பொலிசிடம் சிக்கியது

தமிழீழ விடுதலை புலிகளின் தங்க புதையல் பொலிசிடம் சிக்கியது.

விடுதலை புலிகளினால் புதைக்க பட்ட தங்க நகைகள் உள்ள பகுதியை தோண்டியவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுளள்னர் .

இவர்கள் தேடி தோண்டிய தங்க புதையல் சிக்கவில்லை .ஆனால் தங்கம் தேடிய தங்க கொழுந்துகள் வசமாக பொலிசாரிடம் சிக்கின .

புலிகள் தங்கம் தேடியவர்கள் கைது

வடக்கு பகுதியை தமது ஆளுகைக்குள் வைத்து ஆட்சி புரிந்து வந்த தமிழீழ விடுதலை புலிகள் , சுற்றிவளைக்க பட்ட பொழுது ,அவர்கள் தமது தங்கம் போன்றவற்றை குழி தோண்டி புதைத்து வைத்தனர் .

அவ்வாறு புலிகள் புதைத்து வைத்த தங்கம், சிலாவத்துறை பகுதியில் உள்ளதாக பொலிஸ் அதிகாரிக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து ,அந்த தங்க குழி தோண்ட பட்டுள்ளது .

சிலாவத்துறை பொலிஸ் நிலையதின் அருகில் இவை உள்ளதாக தெரிவிக்க பட்டு தோண்ட பட்ட பொழுதும், அங்கு அவை காணப்படவில்லை .

அதனை அடுத்து புலிகள் தங்க தேடிய போலீஸ் ,அதிகாரி உள்ளிட்ட மூவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .

புலிகளை தேடும் சிங்களவர்கள்

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பொழுதும் ,தமிழீழ விடுதலை புலிகள் பயன் படுத்திய தங்கம் ,பணம் என்பனவற்றை சிங்கள மக்களும் ,சிங்கள படைத்துறை தேடி வருவது அம்பலமாகியுள்ளது .

சிலாவத்துறை பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் தங்க புதையல் உள்ளதாக தெரிவித்து ,அதனை தோண்டிய இலங்கை அரச கடற்படை சிப்பாய் மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிடட மூவர் சிக்கியதில் இருந்து ,சிங்களவர்களும் இப்பொழுது புலிகளை தேட ஆரம்பித்துள்ளது புரிகிறது .