வாகனங்கள் விபத்தில் மக்கள் காயம்

வாகனங்கள் விபத்தில் மக்கள் காயம்
Spread the love

வாகனங்கள் விபத்தில் மக்கள் காயம்

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் வாகனங்கள் விபத்தில் மக்கள் காயம் .பல வாகனகள் விபத்தில் சிக்கியதால் ஏற்பட்ட பேரவலம் .

வவுனியா பட்டானிச்சூர் அரச பாடசாலை அருகே ,மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதால் ஒருவர் பலியாகியுள்ளார் .

வவுனியாவில் பெரும் வாகன விபத்து

வான், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன மோதி கொண்டதில் , வாலிபர் பலியாகியும் சிலர் காயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டனர் .

அவர்களில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் காணப்பட்டதால் ,அனுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்ற பட்டார் .

இவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்

சமீப காலங்களாக இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

சாரதிகள் அலட்சிய இன்மையே இவ்வாறான மிக பெரும் வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு ,காரணமாக அமைவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

வீதி விதிமுறைகளை பின்பற்றாது ,வாகன ஓட்டிகள் செல்வதும் ,பாதை சாரிகள் உள்ளிட்டவர்களும் இவ்விதம் ,கண்மூடித்தமாக வீதியை திடீரென கடப்பதாலும் ,இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .