சுமத்திரா தீவில் நில நடுக்கம் – சுனாமி பீதி
இந்தோனேசியாவில் சுமத்திரா தீவிற்கு அருகாமையில் 6.9 றிக்டர் அளவில் பூமியதிர்ச்சி இடம்பெற்றுள்ளது.
இன்று காலை இந்த பூமியதிர்ச்சி பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவிச்சரிதவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த
பூமியதிர்ச்சியினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பனவை என்றும் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.