கடலில் காணாமல்போன மூவரில் இருவர் சடலமாக மீட்பு

உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Spread the love

கடலில் காணாமல்போன மூவரில் இருவர் சடலமாக மீட்பு

நீர்கொழும்பு கடற்கரையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் இருவரின் சடலம் திங்கட்கிழமை(24) மீட்கப்பட்டுள்ளது.

டயகம பிரதேசத்தை சேர்ந்த வடிவேல் அரவிந்த்த குமார் (23) என்பவருடைய சடலம் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் இடம்பெற்ற ஏத்துக்கால கடற்பகுதியில் சிறிது தூரத்தில் இருந்தும், கொஸ்லாந்தை பிரதேசத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி சிறிவிந் (21) என்பவருடைய சடலம் முற்பகல் 9. 40 மணியளவில் ஏத்துக்கால கடற்பகுதியில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளது.

கடலில் காணாமல்போன மூவரில் இருவர் சடலமாக மீட்பு

மேலும் சுண்ணாகம் பிரதேசத்தை சேர்ந்த ஜெயலக்ஷ்மனின் (23) சடலத்தை தேடும் நடவடிக்கை தொடர்ந்து வருகின்றது

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளில் பணிபுரியும் குறித்த இளைஞர்கள் தமது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை(23) நீர்கொழும்பு பிரவ்ன்ஸ் பீச் ஹோட்டல் அமைந்துள்ள கடற் பகுதியில் குளிக்க சென்ற போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகி மரணமாகியுள்ளனர்.