எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது

எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது
Spread the love

எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 37 கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றும் (28) இன்று அதிகாலையும் (29) அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 பேரும் தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 23 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 5 இழுவைப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள
அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.