![எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே](https://www.ethiri.com/wp-content/uploads/2024/05/oru-poeam.png)
எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே
எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே
எம்மவர்கள் பலருழைத்து ஏற்றுவித்த வல்லாண்மை
மங்குதிங்கே
மதியற்றோர் கொண்ட மடத்தாலே!
நம் நாடென்ன நாடிதென நாவுரைக்க கூசுதிங்கே
நாடி வரும் நல்லோர் நன்கறிந்து கூடினாலும்
நாடிங்கு எழுவதெந்நாள்
நாணுதிங்கே
நாணமற்றோர் கொண்ட நடப்பாலே!
நாம் நாடுகின்ற நாடாள்வார் நாட்டிலெங்கே
நாடிய மக்கள் நலமெங்கே
நாம் நாடுகின்ற நாடொன்று
நாளாகத் தேய்வதிங்கே
நாடற்றோர் நாம் கொண்ட சாபத்தாலே!
தனித்த தமிழின் பெருமையறிந்த தமிழரங்கே
தடையை உடைத்தாலே
மனித்த பிறவி பயனறிந்த
மனிதநேய தமிழரங்கே
மடையை உடைத்தாலே
தனித்த நாடொன்று
தனியாயங்கே
அமைந்திடுமே
தன்மானத் தமிழர் கொண்ட தரணியிலே!
நாட்டிற்காய் தமையீய்ந்த நாயகர்களின் அறத்தையிங்கே
சீரான உணர்வுகளை
சீர்மிகுந்த நற்செயலையிங்கே
நேரான வழிகளிலே
ஊரறிய உலகறிய
ஊர் மக்கள் உலக மக்கள்
உளமறிய செய்வதிங்கே
நேரான வழி கொண்ட
நேர் கொண்ட விழி கொண்ட
கூரறிவுடையோர் கொண்ட
கடமையதிலே!
-நிலாதமிழ். கவிதைகள்
- என்னை எரிக்காதே
- வந்து விடு
- படிக்க துடிக்கும் புத்தகம் நீ
- மங்கைகள் களம் புகுந்தது
- பதில் சொல்
- என் செய்வேன்
- முட்டை கண்ணு பார்வை
- ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா
- எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே
- தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்
- தமிழேந்தியப்பா
- கரும்புலி மறவர்களுக்கு காணிக்கை
- ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்
- ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்
- நெஞ்சை பிளந்து உன்னை தேடி
- அண்ணா
- உன்னை பார்க்கையில
- பாதுகாப்பு வலயமென்று
- செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்
- எமக்கும் ஒரு காலம் வாரும்
- பெண்ணால் உறவில் யுத்தமா
- எட்ட முடியா சிகரம் எட்டு
- இசைக்கு இன்று பிறந்த நாள்
- வெல்ல போறேன் காத்திரு