உன்னை பார்க்கையில
உன்னை நானும் பார்க்கையில
உள்ளம் மெல்ல துள்ளுதடி
கள்ளம் இல்லா பேரழகை
கட்டி அணைக்க துடிக்குதடி
கொஞ்சி பேசும் மொழியழகில்
கொள்ளை பிரியம் வைக்குதடி
அச்சம் இல்லா பேசிடவே
அல்லும் பகலும் துடிக்குதடி
இடையின் அளவை அளக்கையில
இதயம் மெல்ல வெட்குதடி
தாளம் போடும் தாமரையை
தழுவ மோகம் துடிக்குதடி
துடையின் மேலே புருவமது
துரத்தி மெல்ல முறைக்கையில
மெல்ல வாலிபம் துடிக்கிறதே
மெழுகாய் உருகி அழுகிறதே
சொல்ல முடியா சுகமதனை
சொர்க்கமே நீ தருவாயா
அள்ளி பருகிட நாளுமே
அன்பே என்னை விடுவாயா …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 24-05-2024
- என்னை எரிக்காதே
- வந்து விடு
- படிக்க துடிக்கும் புத்தகம் நீ
- மங்கைகள் களம் புகுந்தது
- பதில் சொல்
- என் செய்வேன்
- முட்டை கண்ணு பார்வை
- நெஞ்சை பிளந்து உன்னை தேடி
- உன்னை பார்க்கையில
- எமக்கும் ஒரு காலம் வாரும்
- பெண்ணால் உறவில் யுத்தமா
- எட்ட முடியா சிகரம் எட்டு
- இசைக்கு இன்று பிறந்த நாள்
- வெல்ல போறேன் காத்திரு
- வெற்ற பெற தனித்திரு
- உடைந்த காதல்
- மறக்க முடியா நட்பு காலம்
- மனைவி
- தாயால் கொலையாளியான மகள்
- எட்டு திசையும் எழ வெடி
- எப்படி ஆறும் இத்துயர்
- இது தான் காதல்
- இவள் எங்கள் ஈழ குயில்
- என்னை விட்டு விடு