தமிழேந்தியப்பா
அன்பினிலே கனிந்தவரே
பண்பினிலே முதிர்ந்தவரே
பல்துறையும் கற்றவரே
செல்வச்சீர் பெற்றிருந்தும்
மலர்ப்படுக்கை வாழ்விருந்தும்
தன்நலம் கருதாமல்
இனமானம் பெரிதென்று
தனையீந்து போராடி
தமிழின விடுதலைக்கு
உரம் சேர்க்க வந்தவரே!!!
தமிழேந்தியப்பா
இனியேனும் எமக்கு
விடிவேதும் கிடைக்கும் என்று
எம் தலைவன் கைகோர்த்து
பனியென்றும் குளிரென்றும்
மழையென்றும் வெயிலென்றும் பாராமல்
தெருத்தெருவாய் ஊரூராய்
திரிந்து நிதி திரட்டி
எம்படை வளர்த்தவரே!!!
மொழியெனப்படுவது விழியெனக் கருதி
பழியெனப் பிறமொழி கலப்பது துறந்து
மொழி நலமும் இன நலமும் கொண்டு
அன்னைத் தமிழுக்கே அடி பணிந்து
தன்னைத் தமிழுக்கே தந்து தமிழ் காத்து
எம் தலைவன் மதிப்பினிலே மூத்தவராய்
அறப்போர் புரிந்து சிறப்பாந் தமிழில்
மறப்போர் புரிந்தவரே!!!
எம் ஈழ தேசத்தின் முதுகெலும்பாய்
நிதித்துறையின் ஆலமரமாய் இருந்தவரே
பிள்ளைகளாய் எங்களைப் பார்த்தவரே
உங்கள் பிரிவினிலால் எங்களை வதைத்தவரே
எம் நெஞ்சினிலும் நினைவினிலும்
தமிழேந்தி அப்பாவே நீங்கள் தான்
நெட்டுயிர்க்கின்ற எம் மூச்சினிலும் நீங்கள் தான்
உங்கள் பெயர் சொல்லி தடம் பதித்து
விழுதுகள் நாம்
தேசத்தின் பணி தொடர்வோம்!!!
-நிலாதமிழ்.
- என்னை எரிக்காதே
- வந்து விடு
- படிக்க துடிக்கும் புத்தகம் நீ
- மங்கைகள் களம் புகுந்தது
- பதில் சொல்
- என் செய்வேன்
- முட்டை கண்ணு பார்வை
- ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா
- எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே
- தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்
- தமிழேந்தியப்பா
- கரும்புலி மறவர்களுக்கு காணிக்கை
- ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்
- ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்
- நெஞ்சை பிளந்து உன்னை தேடி
- அண்ணா
- உன்னை பார்க்கையில
- பாதுகாப்பு வலயமென்று
- செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்
- எமக்கும் ஒரு காலம் வாரும்
- பெண்ணால் உறவில் யுத்தமா
- எட்ட முடியா சிகரம் எட்டு
- இசைக்கு இன்று பிறந்த நாள்
- வெல்ல போறேன் காத்திரு