உன் பார்வை போதும்
இதயம் உனை கண்டால்
இதயம் மெல்ல துடிக்குதே
இடரும் இங்கே மறந்து
இரு வாயும் சிரிக்குதே
உன்னை விழி பார்த்தே
உன்னை அள வெடுக்குதே
ஊட்டி கோடை கானலுக்கு
உன்னை அழைக்குதே
உன் பார்வை போதும்
வெட்கம் விட்டு நீ குலுங்க
வேர்வை கொட்டுதே
வேகும் இந்த வெயிலையும்
வேண்டி ஏற்குதே
பஞ்சு மெத்தை தேவையில்லை – உன்
பார்வை ஒன்றே போதுமே
பகலும் இங்கே இருளும்
பல கதை எழுதி மகிழும் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 17-06-2023