உக்கிரேனில் தற்கொலை தாக்குதல் நடத்தும் ஈரான் விமானங்கள்

உக்கிரேனில் தற்கொலை தாக்குதல் நடத்தும் ஈரான் விமானங்கள்
Spread the love

உக்கிரேனில் தற்கொலை தாக்குதல் நடத்தும் ஈரான் விமானங்கள்

உக்கிரேன் நாட்டின் மீது ரசியா தொடுத்துள்ள போரில் ,ஈரானின் தற்கொலை தாக்குதல் விமானங்கள் ,உக்கிரேன் அமெரிக்கா எதிரி நாடுகளை மிரள வைத்து வருகிறது .

உக்கிரேன் களமுனையில் இரண்டு முசுலிம் நாடுகளின், உளவு விமானங்கள் பேசு பொருளாக பேச பட்டு வருகின்றன .

அதில் துருக்கிய உளவு விமானங்களை பயன் படுத்தி உக்கிரேன் ,தாக்குதலை நடத்தி , ரசியா படைகளிற்கு இழப்பை ஏற்படுத்தி வருகிறது .

மறு முனையியல் ஈரானின் தற்கொலை மற்றும் உளவு விமானங்களை கொள்வனவு செய்து ,உக்கிரேன் முக்கிய நிலைகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது .

உக்கிரேனில் ஈரானின் தற்கொலை தாக்குதல் ,விமானங்கள் பாரிய இழப்பை உக்கிரேன் இராணுவத்தினருக்கு ஏற்படுத்திய வண்ணம் உள்ளது .

உக்கிரேனில் தற்கொலை தாக்குதல் நடத்தும் ஈரான் விமானங்கள்

உக்கிரேன் களத்தில் அமெரிக்கா ,பிரிட்டன் ,நேட்டோ நாடுகளின் ஏவுகணைகள் ஆயுதங்கள் என்பன உள்ளன .

அவர்களின் முக்கிய ஆயுதங்களை தோற்கடித்து , வெற்றிகரமாக ஈரானின் தற்கொலை தாக்குதல் கெமிக்காசிகள் தாக்குதல் நடத்தி வருகிறது .


இந்த சம்பவம் அமெரிக்கா மற்றும், பிரிட்டனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ஈராக் போரின் பின்னர் ,ஈரான் தனது உளவு விமானங்கள் மற்றும் , விமானத்தின் தாக்குதல் வீச்சு மற்றும் இழப்புக்களை கண்டறிந்து, அதற்கு ஏற்ப அதனை வடிவமைத்து கொண்டது .

ஈரானின் இந்த கெமிக்காசிகள் விமானங்கள் ,உலக சண்டியரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது என்றால் பாருங்கள்.

அதனால் என்னவோ தற்போது ,ஈரானின் முக்கிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் இராணுவ தளபதிகளிற்கு ,பிரிட்டன் அதிரடி தடை விதித்துள்ளது .

அவர்கள் ஈரானை விட்டு வெளியில் செல்ல முடியா நிலைக்கு தடைகளை விதித்துள்ளது .

இது உக்கிரேன் களத்தில் , இவர்களுக்கு ஏற்பட்ட ஈரான் தற்கொலை தாக்குதல் விமானங்கள் தாக்கம் என படுகிறது .

உக்கிரேன் களத்தில் ஐந்து நாடுகளின் ஆயுத சோதனைகள் இடம்பெற்று வருவதை ,இந்த விடயங்கள் கோடிட்டு காட்டியுள்ளது .

ஆனால் வடகொரியா வழங்கிய ஆயுதங்கள் விபரத்தை இதுவரை மூடிமறைப்பு செய்த படியே, அமெரிக்கா கூட்டணி நாடுகள் பயணித்த வண்ணம் உள்ளனர் .

Leave a Reply