இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது

எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது
Spread the love

இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது

இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்,மாலைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கலே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் .

மேலும் அவர்கள் பயணித்த 02 மீன்பிடி படகுகளையும் மாலைத்தீவு கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

ஒரு கப்பலில் 7 இலங்கை மீனவர்களும், மற்றொரு கப்பலில் 6 இலங்கை மீனவர்களும் இருந்தனர் ,அனைவரும் மாலைத்தீவு கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த இரண்டு மீன்பிடி படகுகளும் கடந்த 25ஆம் திகதி பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு படகுகளும் தற்போது ஹா அலிஃப் ஃபில்லதூ துறைமுகத்தில் நங்கூரமிட்டு, நூராதீன் என்ற மாலைத்தீவு கடலோர பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மாலைத்தீவு கடற்பரப்பில் இந்திய மற்றும் இலங்கை மீன்பிடி கப்பல்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது வழமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடியோ