இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

Spread the love

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழ் மக்களின் ‘சுதந்திரத்திற்கான பறைக் குரல்’ அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் இனப்படுகொலையை மறைக்க சிறிலங்காவை அனுமதிக்க வேண்டாம், இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிப்போம் என கோசம் எழுப்பியதுடன்,

சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாட்டளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிருபர் – அரசன்

    Leave a Reply