இலங்கை இந்திய அதிகாரிகள் கலந்துரையாடல்

இலங்கை இந்திய அதிகாரிகள் கலந்துரையாடல்
Spread the love

இலங்கை இந்திய அதிகாரிகள் கலந்துரையாடல்

இந்தியாவின் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஸ்ரீ புபிந்தர் சிங் பல்லாவின் தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

நாட்டில் உள்ள மீள்புதுப்பிக்கத்தக்க முதலீடுகளுக்கான வாய்ப்புகள் தொடர்பில் இந்திய ஆய்வாளர்களுக்கும் இலங்கையின் அதிகாரிகளுக்கும் இடையே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மின்சக்தி , எரிசக்தி அமைச்சில் நேற்று காலை இடம்பெற்ற தூதுக்குழுவினருடனான சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு, புதிய திட்டங்களை

ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள், தொழில்நுட்ப பரிமாற்றங்கள், முதலீட்டு வாய்ப்புகள், அரசாங்க கொள்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.