கடற்கரை பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு .
பேருவளை மாகல்கந்த கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு (12) 09.00 மணியளவில் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாகவும், அவர் யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.