9 இராணுவத்தினர் கடத்தி கழுத்து வெட்டி கொலை – குவிக்க படும் இராணுவம்
சிரியாவில் தொடர்ந்து வரும் போர் தற்பொழுது உக்கிரம் பெற்றுள்ளது .
சிரியா அரச இராணுவத்தினர் ஒன்பது பேர் கிளர்ச்சி படைகளினால் கடத்த பட்டு ,
கழுத்து வெட்டி படு கொலை செய்ய பட்ட நிலையில் தற்பொழுது சிரியா அரச இராணுவத்தினர் குவிக்க பட்டு வருகின்றனர்
சிரியாவின் முன்னரங்க நிலையான Tafas. பகுதியில் இந்த முக்கிய தாக்குதல்கள் படைகள் ,கனரக ஆயுத வண்டிகளுடன் குவிக்க பட்டு வருகின்றனர்
வரும் மணித்தியாங்களில் இங்கு கடும் சண்டை இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
மக்கள் அச்சத்தின் காரணமாக இந்த நகர் பகுதியில் இருந்து அகதிகளாக வெளியேறிய வண்ணம் உள்ளனர்
எப்பொழுதும் எதுவும் இங்கு இடம்பெறலாம் என்ற அச்சம் நிலவுகிறது
இதுவரை மூன்று லட்சம் மக்கள் பலியாகியும் முப்பது லட்சம் பேர் அகதிகளாகி உள்ளமை குறிப்பிட தக்கது