81 தனிமைப்படுத்தல் நிலையங்கள்

Spread the love

81 தனிமைப்படுத்தல் நிலையங்கள்

இலங்கையில் 1,548 கொவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 33 பேர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த இலங்கையர்கள். ஏனைய 1,515 நபர்கள் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள். அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகபடியாக

கம்பஹா மாவட்டத்தில் 336 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும், கொழும்பு மாவட்டத்தில் 242 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 180 பேரும் பதிவாகியுள்ளனர். மீதி 757 பேர் நாட்டின் ஏனைய

மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளதாக கொவிட் -19 பரவுவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை (11) வரை இலங்கையில் மொத்தம் 273,030 கொவிட் -19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 165,330 பேர் புத்தாண்டுக்குப் பின்னர் இணங்காணப்பட்டவர்கள்.

இன்று (11) அதிகாலை 0600 மணி வரை 1,804 பேர் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று (11) ஹோட்டல்கள் மற்றும் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் 81 தனிமைப்படுத்தல் மையங்களில் 5,453 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிகாலை 0600

மணி வரை (கடந்த 24 மணி நேரத்தில்) 653 பேர் 24 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து தனிமைப்படுத்தல் நிறைவின் பின் வீடு திரும்பினர்.

ஜூலை (09) ம் திகதி வரை இலங்கையில் கொவிட் 19 வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆகும் அவர்களில் 19 பெண்களும் 14 ஆண்களும் உள்ளடங்குவர்.

இன்று (11) காலை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரகல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இன்று (11) காலை முதல் கொழும்பு மாவட்டத்தின் தெமட்டகொட பொலிஸ் பிரிவின் ஆராமய

ஒழுங்கை 66 வது தோட்டம், தலங்கம பொலிஸ் பிரிவின் தலாஹேன தெற்கு கிராம சேவகர் பிரிவின் விஜய மாவத்தை ஜயகத் மாவத்தை மற்றும் தலாஹேன வடக்கு கிராம சேவரக் பிரிவின்

ஜயகத் மாவத்தை, சத்சர மாவத்தை, ஒசுரு மாவத்தை, சமனல மாவத்தை மற்றும் தபால் பெட்டிச் சந்திச், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹன்கல கொஸ்கலவத்த ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன

Leave a Reply