5 நாட்டு மக்கள் இலங்கை வர முற்றாக தடை
கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், ஐந்து நாடுகளிலிருந்து பயணிகள் தரையிறங்குவதற்கு
தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் திகதி 00.01க்கு ஆரம்பமாகும் இத்தடை, மறு அறிவித்தல் வரையிலும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைட் ஆகிய
நாடுகளைச் சேர்ந்த பயணிகளே இலங்கையில், எந்தவொரு விமான நிலையங்களிலும் இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது