20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் – மனுக்களை பரிசீலனை செய்வதற்காக ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு

Spread the love

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் – மனுக்களை பரிசீலனை செய்வதற்காக ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு எதிராக உயர்

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 18 விசேட மனுக்களை பரிசீலனை செய்வதற்காக ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு இன்று (25) நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்த சட்ட மூலத்திலுள்ள சில சரத்துக்கள் அரசியல் யாப்புக்கு முரணானது என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த விசேட மனுக்களை பரிசீலனை செய்வதற்காக பிரதம

நீதயரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன,

விஜித் மலல்கொட, சிசிர டி அப்ரூ ஆகியோரைக்கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் கடந்த 22ஆம் திகதி

நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் சமர்ப்பிக்கப்பட்டது.

எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி, 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் பரிசீலிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply