2 மாத குழந்தைக்கு கொரனோ – கண்ணீரில் குடும்பம்

Spread the love

இலங்கை

2 மாத குழந்தைக்கு கொரனோ – கண்ணீரில் குடும்பம்

கிளிநொச்சி – கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராமத்தில், 2 மாத சிசுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருந்தே, இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சிசுவின் தந்தை கிளிநொச்சியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில்

பணியாற்றுபவர் என்றும், அவருக்கு அண்மையில் தொற்றுறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் இரண்டு மாதக் சிசுக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில், சிசவுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதுடன், தாய்க்கு தொற்று இல்லை என உறுதிபடுத்தப்பட்டது.

இருந்த போதும், அவருக்கு இருக்கும் அறிகுறிகள், தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதனால், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply