வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை
கம்பஹா, பாண்டியமுல்ல பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அந்த வீட்டில் வசித்து வந்த 81 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (05) பிற்பகல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நேற்று காலை வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு பூஜை செய்து விட்டு வீடு திரும்பியது தெரியவந்துள்ளது.
வீட்டில் உள்ள பொருட்களை திருட வந்த நபர் அல்லது குழுவால் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, அம்பலாந்தோட்டை 100 அடி வீதியில் பல்லகஸ்வெவ சந்திக்கு அருகாமையில் நேற்று படுகொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் பாரகம, அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 4 ஆம் திகதி பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸில் இவரின் சகோதரர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர், அப்பகுதி மக்களுடன் சேர்ந்து காணாமல் போனவரை தேடியபோது, அந்த இடத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.