விபத்தில் ஒருவர் பலி நால்வருக்க காயம்

பஸ் மற்றும் பவுஸர் விபத்தில் 6 பேர் காயம்
Spread the love

விபத்தில் ஒருவர் பலி நால்வருக்க காயம்

கொழும்பு – கண்டி வீதியின் தித்தவெல்லகட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்று வேனை கடந்து சென்று கொண்டிருந்த போது வேன் மீது மோதியதுடன் முன்னால் வந்த 2 வேன்களுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் ஒருவர் பலி நால்வருக்க காயம்

வேன் ஒன்றின் சாரதி மற்றும் பின்னால் பயணித்த மூவர் படுகாயமடைந்து வத்துப்பிட்டிவல மற்றும் வரக்காபொல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த காயமடைந்த சாரதி உயிரிழந்தார். 58 வயதுடைய கம்பளை, மரியாவத்தை பகுதியைச் சேர்ந்த சாரதியே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்களில் ருமேனிய பிரஜை ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது

வீடியோ