விபத்தில் தந்தை மகள் பலி

விபத்தில் தந்தை மகள் பலி
Spread the love

விபத்தில் தந்தை மகள் பலி

பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரிகம பஸ்யால வீதியில் கொட்டகந்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

மீரிகமவில் இருந்து பஸ்யால நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த தந்தை மற்றும் மகள் மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் மகளும் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

கல்எலிய பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மகளும் 54 வயதுடைய தந்தையுமே இதில் உயிரிழந்துள்ளனர்.

மேலதிக வகுப்பு முடிந்து தந்தை தனது மகளை வீட்டிற்கு அழைத்து வரும் போது இந்த விபத்து நடந்துள்ளது.

தப்பியோடிய கார் சாரதியை பல்லேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்து வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போது அவர் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.