வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக மீண்டும் சிங்களவர்-கோட்டபாயவின் தொடரும் வேட்டை photo
வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக
சிங்களவர் ஓருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில்
எஸ்.எம்.சமன்பந்துலசேன இன்று பதவியேற்றுக்கொண்டார்.
வவுனியா முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் மாலை
அணிவித்து புதிய அரசாங்க அதிபர் வரவேற்கப்பட்டிருந்தார்.
தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வுகளில் நான்கு மதங்களையும் சேர்ந்த மதகுருமார் ஆசிகளை
வழங்கியிருந்தனர். இதனையடுத்து முன்னாள் அரசாங்க அதிபரின் வரவேற்புடன் புதிய அரசாங்க அதிபர் தனது
கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆவணங்களில் கையொப்பமிட்டு ஆரம்பித்திருந்தார்.
இதன் போது முன்னாள் அரசாங்க அதிபருடன் ஐ.எம் கனீபா வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.
திரேஸ்குமார், உட்பட மாவட்ட செயலக அதிகாரிகள், புதிய அரசாங்க அதிபரின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.video
நிருபர் – வெடியரசன்