வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் அரசியல் கைதி ஆனந்தவர்ணனை ரிஐடி விசாரணைக்கு அழைப்பு

Spread the love

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஆனந்தவர்ணனை ரிஐடி விசாரணை பிரிவுக்கு வருமாறு இன்று (05.06) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணனணையே நாளை 07 ஆம் திகதி காலை 9 மணிக்கு வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் அரசியல் கைதி ஆனந்தவர்ணனை ரிஐடி விசாரணைக்கு அழைப்பு

அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் பிரிவு 01 இன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் ஒன்றை தருவதற்கு, 2023 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 7 ஆம் திகதி காலை 9 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் வவுனியா கிளைக்கு சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.