வவுனியாவில் ஊடகவியலாளர்களுக்கு தேர்தல் அறிக்கையிடல் பயிற்சி பாசறை
வடக்கு கிழக்கு பகுதியினை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான தேர்தல் அறிக்கையில் தொடர்பான பயிற்சி பாசறை வவுனியா மில் வீதியில்
அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்றும், இன்றும் நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் அதனை எவ்வாறு அறிக்கையிடுவது தொடர்பாக
ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இன்டர் நியூஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இவ் பயிற்சி பாசறை இடம்பெற்றது.
ஒய்வு நிலை தேர்தல் ஆணையாளர் நாயகம் எல்.எம்.மொஹமட் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு தேர்தல் தொடர்பான சட்டங்கள், குற்றச்செயல்களின்
தண்டனைகள், வழிகாட்டு நெறிகள், பாராளுமன்றம் கலைப்பதில் உள்ள சிக்கல்கள், ஆரம்ப கால நாடாளுமன்ற
தேர்தல் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.
இவ் பாசறையில் திருகோணமலை, அம்பாறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா உட்பட வடக்கு கிழக்கினை சேர்ந்த
இருபதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.