லண்டனில் சிறுவனை கடித்து குதறிய நாய்
லண்டன் Cumberland Avenue, Canterbury பகுதில் ஒன்பது வயது சிறுவன் ஒருவனை நாய் ஒன்று திடீரென கடித்து குதறியது .
இந்த சம்பவத்தின் பொழுது அந்த சிறுவன் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அம்புலன்ஸ் உலங்குவானூர்தி மூலம் லண்டன் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டான்.
தற்போது லண்டன் மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வரும் சிறுவன் நிலை தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை.
நாயின் உரிமையாளர் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளார்.