லண்டனில் கொரனோ – வீதியில் நடமாடும் மக்கள் – தண்டம் வழங்கும் பொலிஸ்
பிரிட்டனில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாதீர்கள் என அரசு வேண்டுதல் விடுத்து வருகிறது ,
அதனை அலட்சியம் செய்து மக்கள் சிறுவர்களுடன் பார்க்கில் ,குந்தி உள்ளதும் ,உடல் பயிற்சிகள் செய்வதும்
இயல்பான ஒன்றாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
நாள் தோறும் பல நூற்று கணக்கில் மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .அந்த செய்திகளை எல்லாம் பார்வையிட்டு இந்த மக்கள்
தமக்கு ஒன்றும் தெரியாதது போல இவ்விதம் இயல்பாக நடமாடி வருவது
பார்ப்பவர்களை கொதிக்க வைக்கிறது
வரும் நிமிடம் யார் உயிரோடு இருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் மக்கள் இவ்விதம் செயல் படுவதை என்னவென்று கூறிட ..?
மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன ,மக்களை காப்பாற்றும் மருத்துவர்கள் இறந்தவண்ணம் உள்ளனர் ,
நாடு பெரும் அவலத்தில் சிக்கி தவிக்கிறது
மேலும் பல்லாயிரம் மக்கள் பலியாக கூடுமென அபாய அறிவிப்புக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது
இவ்வாறான சூழலில் இந்த மக்கள் இவ்விதம் நடந்து கொள்வது ,மனித
மனங்களின் சிந்தனைகள் மீது சீற்றம் கொள்ள வைக்கிறது அல்லவா ..?