லண்டனில் இருந்து சீனர்களை ஏற்றி சென்ற இலங்கை விமானம்
லண்டனில் இலங்கையர்கள் தவித்து நிற்க ,அவர்களை கைவிட்டு
சீனா நாட்டவர்கள் 218 பேரை இலங்கை விமான சேவை நிறுவனம் ஏற்றி சென்று சீனாவில் இறக்கியுள்ளது
ஆனால் ,லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் தவிக்கும் சொந்த நாட்டு
மக்களை இதுவரை ஏற்றி செல்வதற்கு இலங்கை மறுத்து வருகிறது .
இது ஏன் என்ற கேள்வியை முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவர் எழுப்பியுள்ளார்
வெளிநாடுகளில் உள்ள மக்களை விரைவில் தாம் அழைத்து வர தீவிர
நடவடிக்கை எடுத்து வருகிறோம் என ஆளும் அரசு தெரிவித்திருந்தது ,
ஆனால் அதனை முழுமையாக இதுவரை செயல் படுத்தவில்லை
சீனாவின் நெருங்கிய நண்பனாக விளங்கும் இலங்கை ,சீனாவுக்கு தனது விசுவாசத்தை காண்பித்துள்ளதாக இந்த சம்பவம் அமைந்துள்ளது