யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலயங்கில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 567 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 203 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 770 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 132 கிராம் ஹெராயின், 121 கிராம் ஐஸ், 15 கிலோ 900 கிராம் கஞ்சா, 5,416 கஞ்சா செடிகள்,16 கிராம் ஹேஷ்,
209 கிராம் மாவா, 128 கிராம் மதனமோதகம் மற்றும் 45 கிராம் தூள் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 567 சந்தேக நபர்களில் 06 சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 02 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 05 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது
மேலும், கைது செய்யப்பட்ட 203 சந்தேக நபர்களில், குற்றப் பிரிவினருக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளை பெற்ற 21 சந்தேக நபர்களும் மற்றும் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளை பெற்ற 160 பேரும் உள்ளனர்.
கைரேகை மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களும், பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 11 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.