மூவரால் கற்பழிக்க பட்ட சிறுமி
இலங்கை மொனராகலை எதிமலே பொலிஸ் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் அதே குடும்பத்தை சேர்ந்த மூவரால் கற்பழிக்க பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது
வயிற்று வலியால் துடித்த சிறுமி மொனராகல மருத்துவ மனைக்கு அழைத்து சென்று நடத்திய சோதனையில் கூட்டாக கற்பழிக்க பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது
நடந்தது என்ன
பதின் மூன்று வயதான சிறுமியை அவரது மூத்த சகோதரன் ,மற்றும் தாத்தா,மற்றும் தாயின் தம்பி ,மாமா கூட்டாக இணைந்து கற்பழித்துள்ளனர்
இந்த கூட்டு கற்பழிப்பு சம்பவம் பல மாதங்காளாக தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் இருந்துள்ளது ,சம்பவ தினம் கடுமையான வயிற்று வலியால் துடித்த சிறுமியை பெற்றவர்கல் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பட்ட பொழுதே மேற்படி விடயம் தெரிய வந்துள்ளது
மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஏற்பட்ட சாந்தேகத்தை அடுத்து பொலிசாருக்கு அறிவிக்க பட்ட நிலையில் ,பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் மேற்படி திடுக்கிடும் விடயம் அம்பலமாகியுள்ளது
போலீஸ் விசாரணை
போலீசாரை மேற்கொண்ட தீவிர விசாரணையில் சிறுமி கற்பழிக்க பட்ட சம்பவம் உறுதியானது ,அந்த பாலியல் சம்பவத்தில் அதே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நடத்திய
செயல் உறுதியான நிலையில் தாத்தா,மாமா ,சகோதரன் ஆகியோரை கைது செய்யும் வேட்டையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்
பெற்றவர்களின் அசமந்த போக்கும் சிறுமியின் தெளிவில்லா நிலையும் இந்த கூட்டு கற்பழிப்பு நடந்தேறியமைக்கு காரணமாக அமைந்துள்ளது
மூவரால் கற்பழிக்க பட்ட சிறுமி
குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரலாம் என எதிர் பார்க்க படுகிறது,இதைவிட மேலும் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகலாம் எனவும் எதிர் பார்க்க படுகிறது
அதிர்ச்சியில் குடும்பம்
தமது சிறு வயது மகள் தாத்தா,மாமா,சகோதரனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ள செயல் குடும்பத்தாரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
சிறுமியை கற்பழித்த அனைவரும் தண்டிக்க படவேண்டும் என அவர்கள் உரத்த குரலில் தெரிவித்து வருகின்றனர்
இந்த செய்தி காட்டு தீயாக அந்த கிராமத்தில் பரவிய நிலையில் அந்த பகுதி மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்
பதின் மூன்று வயது பாடசாலை மாணவி கற்பழிக்க பட்ட செய்தி ஊடகங்கள் வாயிலாக பரவிய நிலையில் ,சிறுமிகள் மீது அதிக கவனத்துடன் அவர்களை பராமரிக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் மட்டுமல்லாது இந்த செய்திகள் அறிந்த அனைவரும் உறுதி நிலை எடுத்துள்ளனர்
சினிமா காட்சிகளில் வருகின்ற சம்பவம் போல இந்த கற்பழிப்பு குற்ற செயல் இடம்பெற்றுள்ளது,சிறுமியை சீரழித்த அனைவரும் தண்டிக்க படவேண்டும் என்பது மக்களின் கொதிப்பாக உள்ளது .
- வன்னி மைந்தன் –