மான் கறி சமைத்த சிறுமிக்கு தண்டம்

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களுக்கு அபராத பணம் அறவீடு
Spread the love

மான் கறி சமைத்த சிறுமிக்கு தண்டம்

விலானகம பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, மான் கறி தயாரித்துக்கொண்டிருந்த 17 வயதுடைய சிறுமி, அலவத்துகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த சிறுமி கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மான் கறியை அழிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மான் ஒன்று கொல்லப்பட்டுள்ளதாகவும், வீட்டில் மான் கறி மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில் பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.