மருந்து வகைகளின் விலைகளை விரைவில் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்
சில மருந்து வகைகளின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக ஒளடத உற்பத்தி விநியோகம் மற்றும்
ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதங்களில் சில மருந்து வகைகளின் விலை குறைக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பல மருந்துகளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில்
ஆரம்பிக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.