மரத்தில் நிர்வாணமாக தொங்கிய சடலம்

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Spread the love

மரத்தில் நிர்வாணமாக தொங்கிய சடலம்

ஹோர்டன் சமவெளி அமைந்துள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரமொன்றில்

நிர்வாணமாக தொங்கிய சடலமொன்று நேற்று (16) பட்டிபொல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காட்டுப் பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்ற நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தவில்லை என தெரிவித்த பொலிஸார், குறித்த நபர் தன்னுயிரை மாய்த்துக்கொள்வதற்கு முதல் மதுபானம்

அருந்தியுள்ளதுடன், தான் அணிந்திருந்த சகல ஆடைகளையும் கழற்றி தீவைத்துக் கொளுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது என்றனர்.

மேலும் அவ்வாறு தீ வைத்து எரியூட்டப்பட்ட ஆடைகளுக்கு மத்தியில் இராணுவத்தினரின் இலட்சினை பொறிக்கப்பட்ட ஆடையொன்றும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

10 அடி உயரமான குறித்த மரத்தில் வயர் ஒன்றைப் பயன்படுத்தி தன்னுயிரை குறித்த நபர் மாய்த்துக்கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ள பொலிஸார், சடலத்தை பிரேத


பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தனர்.

    Leave a Reply