மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தவர் மயங்கி விழுந்து மரணம்
கண்டி வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதானவர், மண்ணெண்ணெய்
வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த போது, மயங்கி விழுந்து நேற்று (19) உயிரிழந்திருந்தார்.
மாகொலையைச் சேர்ந்த ஓட்டோ சாரதியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். மயங்கி
விழுந்தவர், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்
மரணமடைந்துவிட்டார் என கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடவத்தையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில்
காத்திருந்த 70 வயது முதியவர் மயங்கி விழுந்து இன்று ( 20) உயிரிழந்துள்ளார்